அமரர் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்காவின் 58 ஆவது சிரார்த்த தின வைபவம் நாளை

அமரர் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்காவின் 58 ஆவது சிரார்த்த தினம் நாளைமுன்னாள் பிரதமர் அமரர் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்காவின் 58 ஆவது சிரார்த்த தின வைபவம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் நடைபெறவுள்ளது.
நிட்டம்புவ ஹொரகொல்ல சமாதிக்கு அருகில் நாளை காலை 8.00 மணிக்கு இடம்பெறும் இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதேவேளை, அமரர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் நினைவு தினத்தை முன்னிட்டு ஹொரணை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி காரியாலத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்ததானம் வழங்கும் நிகழ்வும் நாளை இடம்பெறவுள்ளது.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels:
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.