
நாடளாவிய ரீதியில் பயிர்ச் செய்கைக்கு உட்படுத்தப்படாத காணிகளில் பயிர்ச் செய்கையை ஊக்கப்படுத்தும் விதத்திலான பயிர்ச் செய்கை புரட்சி என்னும் தலைப்பிலான வேலைத் திட்டமொன்றை கமத்தொழில் அமைச்சு ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பான விழிப்புணர்வு வாரம் ஒக்டோபர் 6ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
நாட்டில் பயிர்ச் செய்கைக்கு உட்படுத்தப்படாத எட்டு லட்சம் ஹெக்டயர் காணிகள் உள்ளதாக கமத்தொழில் அமைச்சு மேற்கொண்ட மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.