பரீட்சைக்கு இலகுவான முறையில் படிப்பது எப்படி? தெரிந்து கொள்வோம்!



* அமைதியான சூழலில் படியுங்கள். உங்கள் எண்ணம் சிதறாமல், கவனம் திசை திரும்பாமல் இருக்கும்.

* அட்டவணை போட்டு படிக்க துவங்குகள். அன்றைய தினம் என்னென்ன பாடங்கள் அட்டவணையில் உள்ளதோ, அதை அன்றே முடித்து விடுங்கள்.

* சிலருக்கு அதிகாலை படிக்க பிடிக்கும்; சிலருக்கு நள்ளிரவு படிக்க பிடிக்கும். உங்களுக்கு எந்த நேரம் சரியாக உள்ளது என்று ஆராய்ந்து படிக்கவும்.

* ஒரே நேரத்தில், இரண்டு வேலைகளை பார்க்கும் மனப்பான்மையை மாற்றுங்கள். ஒரு வேலையை செய்யுங்கள். அதை ஒரு மனதாக செய்யுங்கள்.

* பெரிய வினாவை படித்தவுடனோ; எழுதியவுடனோ சிறிது இடைவெளி எடுக்கலாம். அது, மூளையை சோர்வடையாமல் காக்கும்.

* படிக்கும் நேரத்தில் வேறு சிந்தனைகளையோ, மனதில் ஓட்டாதீர்.

* பிடிக்காத பாடத்தையும், விருப்பத்துடன் படிக்க பழகுங்கள். நடைமுறை வாழ்க்கையில் உள்ள சம்பவங்களுடன், ஒப்பிட்டு பாடங்களை படித்தால் எளிதில் புரியும்.

* பாடத்தை குறிப்பெடுத்து படித்தால், ரிவைஸ் செய்வதற்கு உதவியாக இருக்கும்.

* ஒரு பாடத்தை 2 அல்லது 3 முறை திரும்பி பார்த்தால் மட்டுமே, மனதில் நன்கு பதியும்.

* படித்து முடித்த பின், எழுதிப் பார்க்கலாம். அல்லது நண்பர்களுடன் படித்ததை கலந்து ஆலோசிக்கலாம். அவ்வாறு செய்தால், அவர்களிடமிருந்து நாம் படிக்காத சில தகவல்களையும் பெறலாம். சந்தேகங்களையும் தீர்க்கலாம்.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.