
ஹரியானாவின் பகதுர்கார்கில் குறைவான மதிப்பெண் வழங்கிய ஆசிரியரை 12-ஆம் வகுப்பு மாணவன் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் பள்ளியில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது. காலை நேரத்தில் பள்ளி வகுப்பறையில் யாரும் இல்லாத சமயத்தில் தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை எடுத்து ரவிந்தர் என்ற ஆசிரியரை அந்த மாணவன் தாக்கியுள்ளான்.
மாணவனைக் கைது செய்து விசாரித்த போலீசார், கணித தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றதற்காக ஆசிரியர் திட்டியதால் மாணவன் தாக்கியதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அந்த மாணவனுக்கு உதவி செய்த மற்றொரு மாணவனையும் போலீசார் கைது செய்துள்ளனர். படுகாயமடைந்த ஆசிரியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.