ஓமன் அரசின் சிக்கன நடவடிக்கை, பெட்ரோல் விலை வீழ்ச்சி, ஒவ்வொரு முறையும் வீட்டு வாடகையின் மீது மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 10 சதவிகித வரி மற்றும் 5 சதவிகித தரகர் கமிஷன் என செலுத்த வேண்டியுள்ளதாலும், ஒரு வருடத்திற்கு இடையில் வீட்டை காலி செய்து செல்லும் வாடகை குடியிருப்புவாசிகளுக்கு பதிலாக புதிய வீட்டு வாடகைதாரர் உடனே கிடைக்காத நிலை என்பன போன்ற பிரச்சனைகளே வீட்டு உரிமையாளர்களை இப்புதிய முடிவிற்கு தள்ளியுள்ளது.
மேலும், நீண்ட ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவரும் நிலையில் எதிர்பாராவிதமாக நிறுவனங்களால் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களும் தங்களது எஞ்சியகால வீட்டு வாடகையை இழக்க வேண்டியுள்ளது.
இதற்கும் மேல் ஒழுங்காக வாடகை வீடுகளை உரிமையாளர்கள் பராமரிக்காத (general maintenance) காரணத்தால் வீட்டை காலி செய்தாலும் முழுமையாக ஒரு வருட வாடகையையோ அல்லது 3 மாதத்திற்கான வாடகையையோ உரிமையாளர்களுக்கு தண்டமாக அழ வேண்டியுள்ளது என்றும் வாடகைதாரர்கள் விசனப்படுகின்றனர்.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.