ஓமனில் வீட்டு வாடகை பிரச்சனையில் வெளிநாட்டினர் சிக்கித் தவிப்பு !

ஓமனில் பணிபுரியும் பல வெளிநாட்டினர் 3 மாதம், 6 மாதம் போன்ற குறுகியகால பணி ஒப்பந்தங்களின் கீழ் வேலை செய்து வருகின்றனர். இவர்களின் பணி காலத்திற்கு ஏற்றார்போல் இதுவரை வாடகை வீடுகளை ஒப்பந்தம் செய்துவந்த நிலையில் தற்போது 90 சதவிகித வீட்டு உரிமையாளர்கள் 1 வருட ஒப்பந்தத்திற்கு கீழ் வீடுகளை வாடகைக்கு தர மறுப்பதால் வேறு வழின்றி இப்பிரச்சனையில் சிக்கி பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர்.



ஓமன் அரசின் சிக்கன நடவடிக்கை, பெட்ரோல் விலை வீழ்ச்சி, ஒவ்வொரு முறையும் வீட்டு வாடகையின் மீது மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 10 சதவிகித வரி மற்றும் 5 சதவிகித தரகர் கமிஷன் என செலுத்த வேண்டியுள்ளதாலும், ஒரு வருடத்திற்கு இடையில் வீட்டை காலி செய்து செல்லும் வாடகை குடியிருப்புவாசிகளுக்கு பதிலாக புதிய வீட்டு வாடகைதாரர் உடனே கிடைக்காத நிலை என்பன போன்ற பிரச்சனைகளே வீட்டு உரிமையாளர்களை இப்புதிய முடிவிற்கு தள்ளியுள்ளது.

மேலும், நீண்ட ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவரும் நிலையில் எதிர்பாராவிதமாக நிறுவனங்களால் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களும் தங்களது எஞ்சியகால வீட்டு வாடகையை இழக்க வேண்டியுள்ளது.

இதற்கும் மேல் ஒழுங்காக வாடகை வீடுகளை உரிமையாளர்கள் பராமரிக்காத (general maintenance) காரணத்தால் வீட்டை காலி செய்தாலும் முழுமையாக ஒரு வருட வாடகையையோ அல்லது 3 மாதத்திற்கான வாடகையையோ உரிமையாளர்களுக்கு தண்டமாக அழ வேண்டியுள்ளது என்றும் வாடகைதாரர்கள் விசனப்படுகின்றனர்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்


பேஸ்புக்கில் எமது  செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக்  செய்யவும்.

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.