ஜல்லிகட்டில் காளைகள் துன்புறுத்தப்படுகின்றன என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்தது வெளிநாட்டு அமைப்பான பீட்டா.
இந்நிலையில், ஜல்லிகட்டு நடத்த வேண்டும் என்றும், பீட்டா அமைப்பை தடைசெய்ய வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வாட்ஸ் ஆப்பில் ஒரு செய்தி காட்டுத் தீ போல் பரவி வருகிறது.
அதில், தமிழர்கள் யாரும் திங்கட்கிழமை பெட்ரோல் போடவேண்டாம் ஞாயிற்றுக்கிழமை போட்டு கொள்ளுங்கள்.
ஏனென்றால் திங்கட்கிழமை யாரும் பெட்ரோல் போடவில்லை என்றால் வாரத்தில் முதல் வர்த்தக நாளில் அமெரிக்காவுக்கு பாதிப்பு ஏற்படும்.
அது மட்டும் இல்லாமல் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவி ஏற்ற முதல் வாரத்தில் வர்த்தகம் பாதிக்கப்பட்டால் அதற்கான காரணம் என்ன என்று யோசிப்பார்கள்.
அதன் பிறகு வர்த்தக பாதிப்பிற்கு காரணமான பீட்டாவை அவர்களே தடை செய்வார்கள். அமெரிக்காவை வைத்து பீட்டாவை தடுப்போம் என்று குறிப்பிடபட்டுள்ளது.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.