மக்கள் விரும்பினால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெ.தீபா கூறியதாவது, மக்கள் விரும்பினால் நிச்சயமாக அனைத்து தேர்தலிலும் போட்டியிடுவோம். ஆனால், அதற்கு முன்னரே எங்களுடைய முடிவுகளும் அறிவிப்புகளும் அறிவிக்கப்படும்.
தொண்டர்களின் முடிவுகளை பரிசீலித்து வருகிறோம். இப்பொழுது, பெரும்பாலான கருத்துகள் என்னவென்று தெரியவந்துள்ளது.
என்னை பற்றி தவறான செய்திகள் பரப்பப்படுவது நான் அரசியலுக்கு வருவதை பலர் விரும்பவில்லை என்பதை வெளிகாட்டுகிறது.
பிரபல பத்திரிக்கைகளில் கூட தவறான செய்தி வெளியிட்டு வருகின்றன. இது வருந்ததக்கது. இனைஞர்கள் புதிய தலைமுறையினர் அரசியலுக்கு வருவதை அனைவரும் ஆதரிக்க வேண்டும்.
அதனால், இது போன்ற தவறான செய்திகளை பரப்புவதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் வைப்பதாக கூறியுள்ளார்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.