நாடளாவிய ரீதியில் காணப்படும் சதொஸ விற்பனை நிலையங்களின் ஊடாக குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்கள் பலவற்றை தற்சமயம் பெற்றுக் கொள்ளலாம் என்று சதொஸ நிலையத் தலைவர் ரி.எம்.கே.பி.தென்னகோன் தெரிவித்தார்.

நேற்று நள்ளிரவு முதல் இந்த வேலைத்திட்டம் அமுலாவதாக அவர் குறிப்பிட்டார்.
பொதுமக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்களை வழங்குவது இதன் அடிப்படை நோக்கம் என்று தெரிவித்த அவர் சதொஸ விற்பனை நிலையங்களில் இந்தப் பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதை உறுதிப்படுத்த விசேட கண்காணிப்பு வேலைத்திட்டம் ஒன்றும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.