Latest Post

Image result for உலகின் அவசரத்தேவை nature
1. நிலை என்றால் என்ன? அடிப்படை(ஆரம்ப) ஆற்றல் என்ன? இங்கு அது குறித்து பார்ப்போம்
நிலை என்பதை தான் அறிவு என்கிறோம். முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை, மொத்தநிலை என சொல்கிறோம் அல்லவா? அதே அர்த்தத்தில் தான் இங்கு நிலையையும் குறிப்பிடப்படுகிறது.
பிரபஞ்ச அடிப்படையில இரண்டே நிலைகள் தான் 1, அறிநிலை. 2. அறியா நிலை. அறிநிலையை பொருள் என்கிறோம். அறியா நிலையை வெளி என்றோம். பொருளும் வெளியும் நிலைமாறுவது இயக்கம். அந்த இயக்கத்தின் தொடர்ச்சி ஆற்றல். அந்த ஆற்றல்களின் ஒருங்கிணைந்த தொகுப்பு அறிவு.
உதாரணமாக நாம் மூளையில் அறிவு பதிவதை எடுத்துக்கொள்வோம். நம் மூளையில் உடல் இயக்கத்தால் ஒன்றன் பின் ஒன்றாக நினைவு பதிகிறது. இந்த நினைவுகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய ஒருங்கிணைந்த நிலையிலேயே பதிகின்றன. அதாவது நமது மனதுள் ஏற்கனவே பதிந்துள்ள ஒரு நினைவை தொடர்புபடுத்தியே அடுத்த நினைவு பதிகிறது.
ஒரு குழந்தை புதிதாக ஒரு கழுகை பார்ப்பதாக வைத்துக்கொள்ளுங்கள் அது நம்மிடம் சொல்லும்போது அது காக்கா மாதிரி இருந்தது. அது மாதிரி இருந்தது இதுமாதிரி இருந்தது என்றெ சொல்கிறது. அதே அடிப்படையில் தான் நினைவும் பதிகிறது. நான், என் அம்மா, என் அப்பா எனது எனது என்று தனக்கு தொடர்புடைய ஒவ்வொன்றாகவே நினைவில் பதிகிறது. அதே தத்துவம் தான் பிரபஞ்சத்தின் அத்துனை அறிவிலும் இருக்கிறது.
ஒன்றோடு ஒன்று தொடர்புடைய ஆற்றல்களின் கோர்வை(கட்டமைப்பு) அறிவு எனப்படுகிறது.
அறிவு என்றால் மனிதனுள் இருக்கும் நினைவு மட்டுமே அல்ல. இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நினைவு, சிந்தனை, இவையெல்லாம் மனிதனுள் இருக்கும் குறிப்பிட்ட சில அறிவுகள் அவ்வளவே.
அறிவு என்பது ஒருங்கிணைந்த ஆற்றல்களின் கட்டமைப்பு. இது புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். (மேலும் விரிவான விளக்கங்களை காலம் பகுதியில் பார்க்கலாம்.)
அடுத்து பொருள்அறிவு குறித்து பார்ப்போம்
மனிதர்களாகிய நாம் பொருளை மட்டுமே அறியும் ஆற்றல்களை பெற்றுள்ளோம். வெளியின் இயக்கங்கள் எதையும் நமது அறிவு அறிவதில்லை. இரு பொருட்களை அறியும் நமக்கு, இரு பொருட்களுக்கும் உள்ள இடைவெளியில் என்ன இருக்கிறது என்பதை அறிய முடிவதில்லை.
பொருட்களை மட்டுமே அறியும் அறிவுத்தொகுப்பு பொருள்அறிவு எனப்படுகிறது.
பொருள் அறிவு பொதுவாக மனிதனுள் இயல்பறிவு, கருவியறிவு என்ற இரண்டு நிலைகளில் சாத்தியப்படுகிறது.
இயல்பறிவு என்பது மனிதன் உடல்உறுப்புகள் வழியாக நேரடியாக பொருளை உணர்ந்து கொள்ளும் அறிவு. கருவியறிவு என்பது கருவிகளின் உதவியுடன் மனிதன் பொருளை அறிந்து கொள்ளும் அறிவு.
உதாரணமாக: கல்லை நம்மால் நேரடியாக அறியமுடியும். ஆனால் கல்லின் அணுக்களை அறியமுடியாது. அதேநேரத்தில் எலக்ட்ரான் நுண்ணோக்கி என்ற கருவியை பயன்படுத்தி நம்மால் கல்லின் அணுக்களை அறிய முடியும். இதேபோல தான் பிரபஞ்சத்தில் உள்ள ஒளி, ஒலி, வெப்பம், நிறை, மின், வேதி, என எல்லாவகை ஆற்றலிலும் குறிப்பிட்ட தன்மைகளை (நிலைகளை) மட்டுமே நம்மால் இயல்பாகவும், கருவி உதவியுடனும் அறியமுடியும்.
குறிப்பிட்ட ஒளிகளை மட்டுமே நாம் அறிகிறோம் (கண்ணுரு ஒளி)
குறிப்பிட்ட ஒலிகளை மட்டுமே நாம் அறிகிறோம் (10 முதல் 20 டெசிபல் வரை)
குறிப்பிட்ட நிறையை மட்டுமே நாம் அறிகிறோம் ( )
குறிப்பிட்ட வெப்பத்தை மட்டுமே நாம் அறிகிறோம் ( )
குறிப்பிட்ட ஆற்றல்களை மட்டுமே நாம் அறிகிறோம் (ஒளி, வெப்பம், நிறை, மின்)
குறிப்பிட்ட இயக்கங்களை மட்டுமே நாம் அறிகிறோம் (இடம்ப்பெயர்ச்சி, சுழல்)
குறிப்பிட்ட பொருட்களை மட்டுமே நாம் அறிகிறோம்(நிலம்,நீர்,நெருப்பு,வாயு,வான்)
பிரபஞ்சத்தில் நிலவும் வெளியை நம்மால் அறியமுடியாது. ஏனெனில் அவற்றை அறிவதற்கான அறிவு நம்மிடம் இல்லை. ஆனால் பிரபஞ்சத்தில் உள்ள பொருள் அனைத்தையும் நம்மால் அறியமுடியும். (இங்கு பொருள் என குறிப்பிடப்படுவது திட, திரவ நிலையில் உள்ள பொருட்களை மட்டுமல்ல, காற்று, அலை, பிளாஸ்மா, அணுத்துகள் போன்ற நமது இயல்பறிவால் அறியமுடியாத பொருளையும் உள்ளடக்கிய மொத்தத்தையும் குறிப்பிடுவதே பொருள்)
பொருள் அறிவு, இயல்பறிவு, கருவியறிவு இவை புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
அடுத்து பொருள் அறிவுக்கு அப்பாற்பட்ட அறிவு குறித்து பார்ப்போம்.
பிரபஞ்ச பொருளை நம்மால் எளிதில் அறியமுடிவது போல வெளியை அறியமுடிவதில்லை. வெளியில் என்ன இருக்கிறது என்பதை அறிய முடியாவிட்டாலும், எதுவுமே இல்லாத நிலையை அறியும்அறிவு மட்டும் நம்மிடம் உள்ளது. வெளியை பொருத்தவரை நம்மிடம் இருக்கும் ஒரே அறிவு எதுவுமேஇல்லை என்பது மட்டுமே.
பொருளை தாண்டிய வெளியை அறியும் அறிவை தான், பொருள்றிவுக்கு அப்பாற்பட்ட அறிவு என்கிறோம். வெளியில் என்ன இருக்கிறது? என்ன நிகழ்கிறது? அதன் இயக்க என்ன? என்பதை அறிந்துகொள்ளும் அறிவு வெளியறிவு. அனால் பொருளறிவில் கட்டப்பட்டுள்ள நமக்கு அது சாத்தியப்படாது. ஒன்று பொருளை அறியமுடியும் அல்லது வெளியை அறியமுடியும். இந்த இரண்டையும் ஒரே கணத்தில் அறிய முடியாது. அதாவது ஆன்(on) அல்லது ஆப்(off). இந்த ஆன்(on) ஆப்(off) நிலைகளை ஒரே காலத்தில்(நொடியில்) அறிய முடியாது.
இங்கு ஒரு ஐயம் வரலாம். அப்படியானால் பொருளை ஒதுக்கி வெளியில் என்ன இருக்கிறது என்பதை மட்டும் ஒரு கணத்தில் அறிய முடியும் தானே.
இப்படி சிந்தித்த சித்தர்கள் பொருளை ஒதுக்கி(இது மனிதனில் அவ்வளவு எளிதானது அல்ல) வெளியை மட்டும் ஆராய்ந்தார்கள். ஆனால் அவர்களால் வெளியின் நிகழ்வுகளை புரிந்து கொள்ள முடிந்ததே தவிர அதை பொருளறிவில் விளக்க முடியிவில்லை. விளக்கவும் முடியாது. ஏனெனில் அப்படி விளக்க நினைக்கும்போதே அங்கு பொருளறிவு வந்துவிடுகிறது.
சில ஆன்மீகவாதிகள் பொருளறிவை விட வெளியறிவு சிறந்தது. மேலானது, உன்னதமானது, தெய்வீகமானது எனவெல்லாம் சொல்வது சுத்த பொய், மூடத்தனம். உண்மையில் பொருளறிவும் வெளியறிவும் சமபலம் வாய்ந்ததே. இதை நாம் எளிமையாகவே புரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு இயக்கத்துக்கும் அதற்கு இணையான எதிர்இயக்கம் உண்டு என்பது நியூட்டனின் மூன்றாம் விதி. பொருளுக்கு நேர்எதிர் அறிவை(நிலையை) உடையதே வெளி. எனவே பொருளும் வெளியும் தன்மையிலும் மேன்மையிலும் இணையானதே தவிர ஒன்றை விட ஒனறு மேன்மையானது அல்ல.
இந்த பதிவின் சுருக்கம்:
1. மையமும் எல்லையும் உள்ள நிலை பொருள்
2. மையமும் எல்லையும் இல்லாத நிலை வெளி
3. பொருளும் வெளியும் நிலைமாறுவது இயக்கம்.
4. ஒரு இயக்கம் மற்ற(வேறொரு) இயக்கத்தை ஏற்படுத்துமானால் ஏற்பட்ட இயக்கத்துக்கு ஏற்படுத்தும் இயக்கம் ஆற்றல்.
5. ஒருங்கிணைந்த ஆற்றல்களின் கட்டமைப்பு அறிவு.
6. மையமும் எல்லையும் உள்ள ஆற்றல்கட்டமைப்பு(அறிவு) பொருளாக கொள்ளப்படுகிறது.
7. பொருளை மட்டும் அறியும் அறிவு பொருளறிவு, பொருளுக்கு அப்பாற்பட்ட வெளியை அறியும் அறிவு வெளி அறிவு.
இப்போதும் நமக்கு முன் வந்து நிற்கும் கேள்விகள்
1. மையமும் எல்லையும் உள்ள நிலை பொருள் என்பது சரி. அந்த நிலையில் பொருளாக என்ன இருக்கிறது?
2. முதல் நிலை பொருளில் இருக்கும் முதல்அறிவு என்ன? அல்லது ஆரம்ப ஆற்றல் எது?
3. பொருளும் ஆற்றலும் எப்படி வந்தது? எப்படி பிரபஞ்சமாக வியாபித்தது?

2017 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாத உற்பத்தியுடன் ஒப்பிடுகையில், 2018 பெப்ரவரி மாதத்திற்கான உற்பத்திக் கைத்தொழில் சுட்டெண் 0.5% இனால் அதிகரித்துள்ளதென தொகை மதிப்பு புள்ளிவிபரத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிகரித்துள்ள உற்பத்தி கைத்தொழில் சுட்டெண்
திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் (IIP) பெறுமதிகளுக்கமைய, 2017 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாத உற்பத்தியுடன் ஒப்பிடுகையில், 2018 பெப்ரவரி மாதத்திற்கான உற்பத்திக் கைத்தொழில் சுட்டெண் 0.5 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

இந்தக் கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண்ணானது 2018 பெப்ரவரி மற்றும் 2017 பெப்ரவரி மாதங்களில் முறையே 103.9 மற்றும் 103.4 எனப் பதிவாகியுள்ளது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களமானது கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் உள்ளடங்கலாக பல்வேறு பொருளாதாரக் குறிகாட்டிகளைத் தயாரித்து வெளியீடு செய்கின்றது. இந்தக் குறிகாட்டிகள் பொருளாதார முன்னேற்றத்தை அடையாளம் காண்பதற்கு, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் பிரதான துறைகளை அடையாளம் காண்பதற்கு, பொருளாதாரத்தின் செயற்றிறனை மதிப்பீடு செய்வதற்கு, கொள்கை வகுப்பாக்கம் மற்றும் மதிப்பீட்டிற்கு அரசினைப் போன்று கைத்தொழில் நிறுவனங்களாலும் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கமைய குறிப்பிட்ட காலப்பகுதிக்கமைவாக தரப்பட்ட காலப்பகுதிக்குள் பொருளாதாரத்தின் கைத்தொழில் துறையின் தன்மையினை கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் மூலம் அடையாளம் காணமுடியும்.

2017 பெப்ரவரி மாதத்தின் மாதாந்த உற்பத்திக் கொள்ளளவுடன் ஒப்பிடுகையில் 2018 பெப்ரவரி மாதத்திற்கான 'வடிவமைக்கப்பட்ட உலோக உற்பத்திகள்', 'மரம் மற்றும் மரம் சார்ந்த உற்பத்திகள்' மற்றும் 'லெதர் மற்றும் அது சார்ந்த உற்பத்திகள்' என்பனவற்றில் முறையே 30.2%, 20.5% மற்றும் 16.2% என குறிப்பிடக்கூடிய அதிகரிப்புப் பதிவாகியுள்ளது. 2018 பெப்ரவரி மாதத்திற்கான உணவு உற்பத்தியானது 3.7% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

கைத்தொழில் துறையில் உள்ளடங்கும் 'கோக் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திகள்', 'ஏனைய உற்பத்திகள்' மற்றும் 'கடதாசியும் கடதாசி உற்பத்திகள்' என்பவற்றில் முறையே 36.5%, 27.7% மற்றும் 25.2.% வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

2018 ஆண்டின் பெப்ரவரி மாத உற்பத்திக் கைத்தொழில் சுட்டெண் தொடர்பான மேலதிக விபரங்கள் திணைக்களத்தின் இணையத் தளத்தில் www.statistics.gov.lk பிரசுரிக்கப்பட்டுள்ளது.



ரஜினிகாந்த்
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் நேர்மையான அரசியல் செய்யாததால் அறவழியில் அரசியல் செய்வதற்காகவே தான் ஆன்மிக அரசியலில் ஈடுபட உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
அரசியலில் இறங்கப் போவதாக ரஜினிகாந்த் அறிவித்த மூன்றாவது நாளான இன்று (ஜனவரி 2) சென்னையில் குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களை ரஜினி சந்தித்தார்.
ரஜினி முன்மொழிந்த ஆன்மிக அரசியல் என்றால் என்ன என்று பிபிசி தமிழ் கேட்டபோது, ''தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் கட்சிகள் உண்மை, வெளிப்படைத்தன்மை இல்லாமல் செயல்படுகின்றனர். அதனால் தர்மம், உண்மை, வெளிப்படைத்தன்மை கொண்ட ஆன்மிக அரசியலை நடத்த கட்சி தொடங்கியுள்ளேன்'' என்று தெரிவித்தார்.
ஆன்மிக அரசியல் என்பது தர்மத்தோடு நடந்துகொள்வது என்றும் தனது கட்சியை பலப்படுத்தும் வேலைகளில் தான் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
ரஜினிபடத்தின் காப்புரிமை
செய்தியாளர்களுடன் பேசிய ரஜினி திரைத்துறைக்குள் நுழைவதற்கு முன்பாக பெங்களூரூவில் சம்யுக்த கர்நாடகா என்ற பத்திரிக்கை நிறுவனத்தில் இரண்டு மாதங்கள் வேலை செய்ததாக தெரிவித்தார்.
இந்திய அரசியலில் சுதந்திர போராட்டம் தொடங்கி அனைத்து முக்கிய நிகழ்வுகளும் தமிழகத்தில் இருந்தே தொடங்கியுள்ளதால், தான் நினைக்கும் அரசியல் புரட்சியும் தமிழகத்தில் இருந்து தொடங்கவேண்டும் என்பது தனது ஆசை, அதிலும் அந்த மாற்றம் தற்போதைய காலத்தில் தொடங்குவது மேலும் சிறப்பு வாய்ந்தது என்று குறிப்பிட்டார்.

சென்னை: ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்யும் என நார்வே நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. தொடங்கியதுமே
வங்கக்கடலின் தென் பகுதியில்
 தீவிரம் காட்டிய பருவமழை பின்னர் ஓய்வெடுக்க தொடங்கியது. காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கின. வங்கக்கடலின் தென் பகுதியில் இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலை ஒட்டியுள்ள தென் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம்
கடலோர மாவட்டங்களில் கனமழை


தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் கனமழை இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தென் கடலோர மாவட்டங்களில் பரவலாக மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வெளுக்கும் இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை சென்னையில் கனமழை பெய்யும் என நார்வே நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சனிக்ககிழமை இரவு முதல் ஞாயிற்றுக் கிழமை காலை வரை லேசான பின்னர் கனமழையும் பெய்யும் என்றும் நார்வே வானிலை மையம் கூறியுள்ளது. இரவில் கனமழை
ஞாயிற்றுக்கிழமை வெளுக்கும்


இதைத்தொடர்ந்து பிற்பகலில் லேசான மழையும் இரவு நேரத்தில் கனமழையும் பெய்யும் என்றும் நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது. திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் விட்டு விட்டு லேசான மழை பெய்யும் என்றும நார்வே நாட்டு வானிலை மையம்
இரவில் கனமழை



கூறியுள்ளது. எதிர்பார்ப்பு எழுந்துள்ளது ஏற்கனவே பல முறை நார்வே நாட்டு வானிலை மைய கணிப்புகள் பலித்துள்ளது. இதனால் இந்த முறையும் சொன்னது போல் மழை பெய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.